
விழியின் ஓரமாய் ஒரு துளி குமுறல் !
அடுப்பில் உலை கொதிக்க ,
குண்டுகளின் சத்தம் காதை கிழிக்க ,
என்ன இது ஒரு தீபாவளி கொண்டாட்டம் ???என நினைக்க,
கனவு கலைந்து பார்க்கும் பொழுது ,
நானும் இன்னும் இலங்கை வாழ் தமிழன் என்று தான் உணர்ந்தேன் !
என் இந்திய நாட்டு தமிழர்களுக்கு வெடியின் சத்தம் ஒரு வித சப்தம் ,
என் ஈழத் தமிழர்களுக்கு எமனின் அழு குரலாகத்தான் இருக்கிறது வெடியின் சத்தம் ,
மதியை காட்டி சோறு ஊட்டுவாள் என் இந்தியத் தாய் ,
தன் கண்ணீரையும் கணவனையும் இழந்த துயரத்தில் சோறு ஊட்டுவாள் என் ஈழத் தாய்,
ஒவ்வொரு விடியலிலும் அச்சம் அகன்று வெளிச்சம் சுடர் விடுகிறது ,
எப்பொழுது என் இன மக்களுக்கு நல் வாழ்வு பிறந்து வாழ்வு சுடர் விடும் ??????
தமிழ்த்தாயே "இனியும் பொறுக்காதே ! காத்திடு உன் பிள்ளைகளை "
இது உன் மற்றொரு பிள்ளையின் அழுகை !
2.1.2009
3 comments:
same feeling as that of 70 million tamilians..and others worldwide......expect the useless UPA govt..TO DO SOMETHING....ATLEAST AFTER THESE 60 YRS OF STILL CONTINUING CONFLICT AND THE RACIST like rajapakse should stop genocide on tamils.
brilliant da..i like ur work very much...
sorry for the spelling mistakes !
Post a Comment